Home இலங்கை இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று  நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பதற்கென 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தகுதிபெற்றுள்ளனர். இம்முறை 916 இளைஞர், யுவதிகள் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதோடு இவர்களில் 225 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

கிளிநொச்சியில்  இளைஞா் பாராளுமன்ற தோ்தலுக்கான  வேட்புமனுத்தாக்கல்  தாக்கல்

Dec 2, 2016 @ 15:50

youth-2

225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி   நடைபெறவுள்ளது.   இந்நிலையில்  இன்று 02-12-2016  கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள கரைச்சி ,கண்டாவளை ,பூநகரி ,பச்சிலைப்பள்ளி ஆகிய  பிரதேச  செயலகங்களில்    வேட்புமனுத் தாக்கல்  நடைபெற்றது

கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நான்கு வேட்ப்பாளர்களும் கரைச்சி பிரதேச செயலகத்தில் ஐந்து  வேட்ப்பாளர்களும் ,பூநகரி பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் ,பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலகத்தில் ஆறு  வேட்ப்பாளர்களும்  வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்
youth-1

மொத்தமாக 225 பேரைக் கொண்ட இவ்இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஊடாகத் தெரிவு தெரிவு செய்யப்படுவதுடன் 15 பிரதேச செயலாளர்களுக்கு அதிகமான பிரதேசங்களைக் கொண்ட மாவட்டங்களுக்கு போனஸ் அடிப்படையில் 9 உறுப்பினர்களும் பல்கலைக்கழகங்களில் இருந்து 15 உறுப்பினர்களும் சட்டக் கல்லூரியில் இருந்து 10 உறுப்பினர்களும் மாற்றுத் திறனாளிகளில் இருந்து 2 உறுப்பினர்களும் பாடசாலை மாணவர் தலைவர்கள் தலைவிகளில் இருந்து 10 உறுப்பினர்களும் இளைஞர் பிரதிநிதிகள் உள்ள வேறு அமைப்புக்களில் இருந்து 9 பேரும் அமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சில் 10 பேரும் நேர்முகப் பரீட்சை ஊடாகவும் மொத்தமாக 225 பேர் தெரிவு  செய்யப்பட உள்ளனர்

இத்தேர்தலில் 2016.03.31 ஆம் திகதிக்கு முன் புனரமைக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட இளைஞர் கழகங்களின் 13 தொடக்கம் 29 வயதுடைய இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களிக முடியும்    அத்துடன்  தேர்தல் தொகுதிகளில் வசிக்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் , சட்ட பீட மாணவர்கள் , மற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பங்களை  பதிவு செய்து எழுத்து பரிட்சை மூலம் தங்கள் போனஸ் ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும்

youth-6

இதேவேளை சகல பிரதேச செயலகங்களிலும் டிசம்பர் 18ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன்     முதலாவது பாராளுமன்ற  அமர்வு  2017  ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில்     மகரகமையில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

youth-7 youth-9 youth-10 youth-11

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More