Home இலங்கை மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – நிதி அமைச்சர்

மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – நிதி அமைச்சர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாகாண முதலமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் மாகாணசபைகளுக்கு நிதி வழங்கப்படும் முறையில் இந்த தடவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சில அமைச்சுக்களின் ஊடாக நேரடியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களைப் போன்றே வழமையான அடிப்படையில் மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகன பதிவுகள், முத்திரைக் கட்டணங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் ஊடாக திரட்டப்படும் பணம் அந்தந்த மாகாணசபைகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More