Home பிரதான செய்திகள் ரஸ்யாவில் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடத்துவது குறித்து சர்ச்சை

ரஸ்யாவில் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடத்துவது குறித்து சர்ச்சை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் நடத்துவது குறித்து சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2018ம் ஆண்டில் ரஸ்யாவில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து தடை கொள்கைகளுக்கு  ரஸ்யா ஒத்துழைப்பு வழங்காமையே இந்த சர்ச்சைக்கான பிரதான காரணமாகும். ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் ரஸ்ய அரசாங்கத்தின் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இந்த நிலையில் ரஸ்யாவில் உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நடத்துவது பொருத்தமற்றது எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ரஸ்யாவில் போட்டியை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More