Home இலங்கை கொத்மலையில் நேபாள சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேரூந்து விபத்து – 18 பேர் காயம்

கொத்மலையில் நேபாள சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேரூந்து விபத்து – 18 பேர் காயம்

by admin

இன்று பிற்பகல் 03.30 மணியளவில் நேபாளத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு;ள்ளனர்.

கொத்மலை மகாவெலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை பக்கமாக செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில்  பேருந்து  பாதையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 5 நேபாள நாட்டு  பிக்குமார்களும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர். இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை போக்குவரத்து  காவல்துறையினர்  மேற் கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More