Home இந்தியா தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு – தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதி

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு – தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதி

by admin

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்   பயிர்கள் கருகியமையால்  தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா  நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால்  இதுவரையில்  100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில்  இது தொடர்பாக பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு அறிக்கை இன்று முதலமைச்சரிடம்  வழங்கியதன் அடிப்படையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளர்h.

மேலும் விவசாயம் பொய்த்த அதிர்ச்சியால் உயிரிழந்தோர் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் நிலவரி தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும்  கால்நடை தீவனப் பற்ற்றாக்குறையை போக்க 78 கோடி ரூபாய் மதிப்புள்ள  திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More