Home இலங்கை ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு எதிராக கோரி சட்டமா அதிபர் மனு தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு  எடுத்து கொள்வதற்கான உத்தரவொன்றை கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு பிறப்பிக்குமாறு; குறிப்பிடப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் 5 சந்தேக நபர்களை அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு மீளவும் வழக்கை விசாரணை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More