Home இலங்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை – பந்துல குணவர்தன

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை – பந்துல குணவர்தன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட , ஈடுபடும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் தற்போதை அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். அரசியல் நோக்கில் பழிவாங்குவதற்காக அரசாங்கம் மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More