Home இலங்கை லொத்தர் சீட்டு விற்பனை முகவர்கள் மீளவும் போராட்டத்தில் குதிப்பு

லொத்தர் சீட்டு விற்பனை முகவர்கள் மீளவும் போராட்டத்தில் குதிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் இன்று முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனர். கொழுப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த அறிவித்தலை லொத்தர் சீட்டு விற்பனை முகவர் மற்றும் விற்பனையாளர் சங்கம் விடுத்தது.

லொத்தர் சீட்டின் விலையை 20 ரூபா வரை குறைக்குமாறு கோரியே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.  ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் லொத்தர்சீட்டு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More