Home இலங்கை ஹம்பாந்தோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு பிணை

ஹம்பாந்தோட்டை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு பிணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல பிரதேசத்தில் அண்மையில் கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 34 பேரில் பத்து பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் ஒவ்வொருவரும் தலா ஐந்து லட்சம் ரூபா என்ற அடிப்படையிலான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 24 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More