Home இலங்கை மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து அம்பலப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என லசந்த அறிந்திருந்தார்

மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து அம்பலப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என லசந்த அறிந்திருந்தார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்துவது  உயிராபத்தை ஏற்படுத்தும் என்பதனை சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க  அறிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

லசந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது குற்ற விசாரணைப் பிரிவினர் , லசந்தவின் குடும்ப உறுப்பினர்கள்  இதனை தம்மிடம் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

லசந்த கொலை வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மிக் கொடுக்கல் வாங்கல்களின்  போது பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More