Home உலகம் புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது

புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில்  நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர்.  துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More