Home இலங்கை பிரதமர் ரணில், சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில், சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு பயணம்  செய்துள்ள நிலையில் மாநாட்டின் இடைநடுவில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பு நிதி நகரம் போன்றன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் சீன நிறுவனங்கள் பல முதலீடு செய்துள்ளதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More