Home இந்தியா ஜல்லிக்கட்டு ஆதரவாக மரீனா கடற்கரையில் போராடும் இளைஞர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

ஜல்லிக்கட்டு ஆதரவாக மரீனா கடற்கரையில் போராடும் இளைஞர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

by admin


ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மரீனா கடற்கரையில்  போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் கலந்து கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.    முதலமைச்சர்  நேரில் வர வேண்டும் அல்லது உரிய பதில் அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில், மரீனாவில்; போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சார்பாக 10 பேர் கொண்ட போராட்டக் குழு உருவாக்கப்பட்டு அவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் ஜனநாயக ரீதியான இந்த போராட்டத்தை தமிழக அரசு மதிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்  எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More