Home இலங்கை 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்படக்கூடிய சகல சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் வாழும் பெரும்பான்மையானவர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஒரு தடவை இழைத்த தவறுகள் மீளவும் இழைக்கப்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது, அரசியல் சாசனம் குறித்த விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துதல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சரியான முறையில் முன்னோக்கி நகர்த்தப்படும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More