Home இந்தியா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலீசார் தடியடி – போராட்டத்தை கைவிடுமாறு பொலீஸ் துணை கமிஷனர் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலீசார் தடியடி – போராட்டத்தை கைவிடுமாறு பொலீஸ் துணை கமிஷனர் கோரிக்கை

by admin

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் மெரீனா கடற்கரையில லட்சக்கணக்காண இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக  போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் இன்று காலை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள ஜேப்பியார் குழும கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்ததனையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலைந்து போகுமாறு கூறிய போதும்  மாணவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி சோழிங்கநல்லூர் சந்திப்பில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதுடன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதாகவும் போலீசாரின் தாக்குதலை அடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர் எனவும்  இதனால் பழைய மகாபலிபுரம் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது எனவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்  கலைந்து செல்லாத மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சென்னை மைலாப்பூர் பொலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் மெரினாவில் திரண்டுள்ள மாணவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும்  ஒலிப்பெருக்கி மூலம் போராட்டத்தை கைவிடுமாறும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் எனவும்  கேட்டுக் கொண்டார் எனவும்   எனினும்  மாணவர்கள் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும்  வழங்கவில்லை எனவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More