Home இந்தியா மதுரையில் ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்களுக்கு 15 நாட்களுக்கு தடை

மதுரையில் ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்களுக்கு 15 நாட்களுக்கு தடை

by admin


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என் தெரிவித்துள்ளதுடன்  மதுரை புகையிரத  நிலையத்திற்குள் புகுந்த தண்டவாளத்தில் அமர்த்து போராடி வருகின்றனர்.

மேலும் மதுரை செல்லூரில் புகையிரத  மேம்பாலத்தில் சென்ற புகையிரதத்தை  மறித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில்  மதுரை மாநகரில் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த போலீசார் தடை வி;தித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் எனவும்  தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More