Home இலங்கை வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம் ஆளுநா் றெஜினோல்ட்குரே:-

வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம் ஆளுநா் றெஜினோல்ட்குரே:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

பெப்ரவரி நிறைவுக்குள் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார்.

31.01.2017 பிற்பகல் 3.00 மணியளவில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகளைச் சந்தித்த வடமாகாண ஆளுநர் மேற்படி உறுதிமொழியினை வழங்கியதுடன் அமைச்சரவை அனுமதிப் பத்திரம், நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கு என நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் என்பனவற்றையும் வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் வழங்கியுள்ளார்.

இதேவேளை வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான விசேட கூட்டமொன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03.02.2017 முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் சங்கத் தலைவர் இ.ஜெயராஜ் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் நியமனம் வழங்கப்படும் தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்படும் என வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்ததுடன் கீழ்வரும் தனது தொலைபேசி இலக்கத்துடன் தொண்டர் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்துள்ளார். 0776380629

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More