Home இலங்கை நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை – ஜனாதிபதி

நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாடு பிளவடையச் செய்யப்படாது என உறுதியளித்துள்ள அவர் அனைத்து இன மக்களினதும் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதே அரசாங்கத்தின் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்தியாகும் எனவும் விமர்சனங்களை ஒர் சவாலாகக் கொண்டு அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ளாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More