Home இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்

by admin

இன்று மாலை 8.00 மணியளவில் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்றுக் குழு  , மருத்துவ மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையில் நாளை 03.02.2017 காலை 8.00 மணி முதல் 12.00 மணிவரை அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது .மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும்  மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

இவ் அடையாள வேலை நிறுத்தத்தில் அவசர நோயாளர் மற்றும்  சீறுநீரக நோயாளர் சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கொழும்பு சீமாட்டி ரிச்வே வைத்தியசாலை, டீ சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை, காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலை, தேசிய புற்று நோய் மற்றும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை,   மற்றும்  பேராதெனிய  சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை  ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப் படமாட்டாது எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More