Home இலங்கை கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

by admin

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 6 நாட்களாக  இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பொது மக்களில் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையினால் இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு செயலகத்தின் முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்று பிரதேச செயலகத்தினுள் யாரையும் நுழைய விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், பிரசேதச செயலக அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  எனினும், மக்கள் தொடர்;ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More