Home இலங்கை புலிகள் மீளவும் தலைதூக்கக் கூடிய சாத்தியம் உண்டு என்பது மெய்யானதே – உதய கம்மன்பில

புலிகள் மீளவும் தலைதூக்கக் கூடிய சாத்தியம் உண்டு என்பது மெய்யானதே – உதய கம்மன்பில

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்ற கருத்து மெய்யானதேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கி வருவது உறுதியாகியுள்ளதாகவும் எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழத்திற்கு தடையாக இருப்பதாகக் கருதி சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கும் சக்திகள் மஹிந்தவிற்கு எவ்வளவு அச்சுறுத்தலாக அமைவார்கள் என்பதனை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி புலிகள் மீளவும் தலைதூக்குவது குறித்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் மீளவும் தலைதூக்குவதாக தாம் கூறிய போது அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை எனவும், தற்பொழுது புலனாய்வுப் பிரிவினரும் அதனை உறுதி செய்துள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More