Home இலங்கை காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர்.

காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.காரைநகர் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீர்கொழும்பு , புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் இழுவை படகுகளில் காரைநகர் பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


காரைநகர் கடற்பிரதேசம் சிறுகடல் பகுதியாக இருக்கின்ற நிலையில் அப்பகுதிக்குள் இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் அப்பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.

குறித்த மீனவர்கள் காரைநகர் பகுதியில் கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையை பயன்படுத்தியே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More