Home இலங்கை கனுசியாவை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாமைக்கு கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது

கனுசியாவை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாமைக்கு கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியை சேர்ந்த  நாகராஜன் கனுசியா எனும் தரம் ஆறு மாணவியை  18 நாட்களாக  பாடசாலைகளில் சோ்த்துக்கொள்ளாமை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் 18 நாட்களின் பின்னா் கிளிநொச்சி  நகரிலுள்ள பாடசாலை ஒன்றில்  மாணவி சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தாா்.

இதயைடுத்து குறித்த விடயம் தொடா்பில் விளக்கம் கோரி  மத்திய கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் மேற்படி மாணவியை சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகாண கல்வி அமைச்சு கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.  வலயக் கல்வித்திணைக்களம் சம்மந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரடியாக கடிதத்தை கையளித்து மாணவி சேர்த்துக்கொள்ளப்படாமைக்கான  உடனடியான விளக்கத்தை கோரியுள்ளது

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More