Home இந்தியா ஓ.பன்னீர்செல்வம் , சசிகலா தங்கியிருக்கும் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது:-

ஓ.பன்னீர்செல்வம் , சசிகலா தங்கியிருக்கும் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது:-

by admin

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தெரிவித்த குற்றச்சாட்டுகளினை அடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தங்கியிருக்கும் போயஸ் கார்டனிலும் அவரவர் ஆதரவாளர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு பகுதியிலும் பொலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More