Home இலங்கை இரணைதீவு முகாமை மூட முடியாது – பிரதமர்

இரணைதீவு முகாமை மூட முடியாது – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரணை தீவு கடற்படை முகாமை மூடிவிடுமாறு சிறிதரன் கோரியிருந்தமைக்கு அவ்வாறு குறித்த முகாமை மூடிவிட முடியாது என பிரதமர் பதிலளித்துள்ளார்.
இந்த முகாமை எந்த வகையிலும் மூட முடியாது என கடற்படையினர் தம்மை தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களை தடுக்கவும், போதைப் பொருள் கடத்தல்களை இ;ல்லாதொழிக்கவும் இந்த முகாம் மிகவும் அவசியமானது என  பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More