Home இந்தியா எண்ணெய் கசிவுகள், கடலூர் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன

எண்ணெய் கசிவுகள், கடலூர் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன

by admin

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சென்னை கடற்கரைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன் மிதந்த எண்ணெய் கசிவுகள், கடலூரின் கடற்கரைப் பகுதிகளில்  காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் மீனவ கிராமமான தாழங்குடாவில் தொடங்கி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் எண்ணெய் கழிவுகள் கரையில் தேங்கியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரையில் எண்ணெய் பரவி இருப்பதால், அந்த இடத்தில் கால் வைக்கமுடியவில்லை எனவும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்த அவர்கள்  தற்போது வரை அரச அதிகாரிகள் யாரும் சோதனை எதுவும் நடத்தவில்லை எனவும்  கரையில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த எந்த முயற்சி  எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More