Home இலங்கை மக்கள் பிரதிநிதிகளின் போதிய அழுத்தம் இன்மையே நிலமீட்பு போராட்டங்கள் தொடர்வதற்கு காரணம் – பரவிபாஞ்சான் மக்கள்

மக்கள் பிரதிநிதிகளின் போதிய அழுத்தம் இன்மையே நிலமீட்பு போராட்டங்கள் தொடர்வதற்கு காரணம் – பரவிபாஞ்சான் மக்கள்

by admin

எங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  எங்களின் காணி பிரச்சினைக்கு அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காமையே இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நீண்டு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரவிபாஞ்சானில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாது உள்ள 9.5 ஏக்கர் காணிக்குச்சொந்தமான 27 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுழற்சி முறையில்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களின் காணி மீண்டும் தங்களிடம் கையளிக்கப்படும் வரை சுழற்சி முறையில் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தெரிவித்து இரண்டாவது நாளாக  கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில்  தாங்கள் பேராட்டத்தில் ஈடுப்பட்ட போது எங்கள் மத்தியில் வருகை தந்த நல்லாட்சி அரசின் அமைச்சர் விஜயகலா, மற்றும்  எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஜயா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன்ஈஅங்கஜன் ஆகியோர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியிருந்தனர் ஆனால் எதுவும் நடைபெறவில்லை. எனவேதான் நாங்கள் தறபோது தீர்க்கமான முடிவாக   எடுத்திருக்கின்றோம் எங்களின் காணி எங்களிடம் கிடைக்கும் வரைக்கும்  இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை  கைவிடப்போவதில்லை என்று  தெரிவித்தனர்.

மேலும்  எங்களை சந்திப்பதற்கு எவரோனும் அரசியல் வாதிகள் வருவதாக இருந்தால்  கடந்த காலங்கள் போன்று வாக்குறுதிகளோடு வரவேண்டாம் என்றும் உறுதியான தீர்மானத்துடன் வாருங்கள் அல்லது  நல்லாட்சி  அரசுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More