Home பிரதான செய்திகள் ஐ.பி.எல் ஏலம் டெஸ்ட் வீரர்களை இழிவுபடுத்தியுள்ளது – கெவின் பீட்டர்சன்

ஐ.பி.எல் ஏலம் டெஸ்ட் வீரர்களை இழிவுபடுத்தியுள்ளது – கெவின் பீட்டர்சன்

by admin

இந்தியன் பிரிமியர் லீக் ஏலம் டெஸ்ட் விரர்களை இழிவுபடுத்தியுள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு இருபது  வீரர்கள் இங்கிலாந்து அணியின் செல்வந்த வீரர்களாக காணப்படுகின்றனர் எனவும் இருபதுக்கு இருபது  போட்டிகள் வளர்ச்சியடைந்து செல்வதாகவும், டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் வீழ்ச்சிப்பாதையில் நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டைமால் மில்ஸ் ஆகிய வீரர்கள் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More