வாழைச்சேனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரான் கும்புறுமூலை மர முந்திரிகை வீதியில் விடுதி ஒன்றினை புதிதாக அமைக்கும் நோக்கில் காணியை துப்பரவு செய்தவேளை குறித்த இரண்டு கைக் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து அவர்கள் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment