Home இலங்கை கைதிகள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து 8 காவல்துறை குழுக்கள் விசாரணை

கைதிகள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து 8 காவல்துறை குழுக்கள் விசாரணை

by admin


சிறைச்சாலை பேரூந்தில்  வழக்கில் முன்னிலையாவதற்காக  அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து எட்டு காவல்துறை குழுக்கள் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை எட்டு முதல் பத்து பேர் வரையில் மேற்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் பயணித்த வாகனம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  சந்தேக நபர்களை கடுவெல நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஐந்து சந்தேக நபர்களும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More