Home இலங்கை பிரதம நீதியரசர் பதவிக்கு பிரியசாத் டெப் நியமிக்கப்படலாம்

பிரதம நீதியரசர் பதவிக்கு பிரியசாத் டெப் நியமிக்கப்படலாம்

by admin


பிரதம நீதியரசர் பதவிக்கு ப்ரியசாத் டெப் நியமிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியல் சாசன சபை கூடி இது குறித்து தீர்மானித்துள்ளது.

இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இன்றையதினத்துடன் ஓய்வு பெற்றுக்கொள்கின்ற நிலையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  ப்ரியசாத் டெப் மற்றும் கித்சிறி ஆகியோரின்   பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிரேஸ்ட நீதியரசரான ப்ரியசாத் டெப் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More