Home இந்தியா ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

by admin


ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளிங்கிரி மலையில் கட்டடங்களை கட்டியமை தொடர்பான வழக்கில் பதில்  விளக்கமளிக்குமாறு  உயர்நீதிமன்றம்   ஈஷா யோக மையத்திற்கு  கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான  பி.முத்தம்மாள் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்

வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில்  விதிமுறைகளை மீறி 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் தியான மண்டபங்கள், கார்  தரிப்பிடம், பூங்கா போன்ற கட்டுமானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன எனவும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ஈஷா யோகா மையம் விதிகளை மீறி 109 ஏக்கரில் கட்டிடங்களை கட்டியுள்ளதாகவும்  ஆதியோகி சிவன் அமைத்தற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாகவும் தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த வழக்கு  இன்று உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்த போதே  , விதி முறை மீறி கட்டப்பட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு ஈஷா யோகா மையத்திற்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More