Home இலங்கை சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது

by admin


சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதான நிமால் சந்திரசிறி தஹாநாயக்க என்ற தல்பிட்டிய வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் வாத்துவ காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்திருந்தார்.

காவல்துறையினர் சட்டவிரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருந்த போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசிய மனித உரிமைப் பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என்பது குறிப்pபடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More