Home இலங்கை இணையத்தள பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் – ஜனாதிபதி

இணையத்தள பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் – ஜனாதிபதி

by admin


இணையத்தள பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு தொடர்பில் சில எதிரிகள் இணைய தளம் மற்றும் ஊடகங்களின் ஊடாக போலிப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிற்கு சென்றுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு இலங்கையர்களை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாத்து மிகச் சிறந்த நாடாக இலங்கையை மாற்றும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

44 ஆண்டுகளின் பின்னர் உத்தியோகபூர்வ  பயணம் மேற்கொள்ளுமாறு ரஸ்யா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் அந்த  பயணத்தில் தாம் இணைந்து கொள்ளப் போவதாகவும்; தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More