Home இந்தியா நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

by admin

நெடுவாசல் போராட்டம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.  மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்ததையடுத்தை ஏற்று நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும்  கோரிக்கை நிறைவேறா விட்டால் போராட்டம் மீண்டும் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததனை எதிர்த்து நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More