Home இலங்கை ராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில்; கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்கின்றது:-

ராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில்; கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்கின்றது:-

by admin

ராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, ராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்கள் இன்று 17ஆவது நாளாக தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், தமது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து முல்லைத்தீவு ராணுவத்தினரும் காவல்துறையினரும் போராட்டத்திற்கு தடை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

எனினும் ராணுவத்தினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, பொதுப் போக்குவரத்திற்கும், ராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் இடையூறு ஏற்படாதவாறு அமைதியான முறையில் போராட்டத்தை தொடருமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்கின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More