Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை 98 வீதம் பூர்த்தி

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை 98 வீதம் பூர்த்தி

by admin

 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக ஊர்காவற்துறை நீதிவான் தெரிவித்தார்.புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதன் போதே நீதிவான் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
சந்தேக நபர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் விசாரணைகள் நேர்மையாக நடைபெறுகின்றது 98 வீத விசாரணைகள் முடிவடைந்து விட்டன.
இந்த வழக்கு விசாரணைக்கு உதவுகின்றோம் எனும் பேர்வழியில் வருபவர்களிடம் ஏமாற வேண்டாம். அவர்களை நம்பி பணம் நகைகளை கொடுத்து ஏமாறவேண்டாம். இந்த வழக்கு விசாரணை குறித்து ஏதேனும் தெரிவிக்க இருப்பின் குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நீதிமன்றில் முன்னிலையாகி தமது வாக்கு மூலத்தை தெரிவிக்க முடியும் என நீதிவான் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகளை 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்க உத்தரவு இட்டார்.
 
வழக்கின் பின்னனி.

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More