Home இந்தியா போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி

போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி

by admin


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 14ம் திகதியிலிருந்து டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இடம்பெற்று வருகின்ற போராட்டம் இந்தப் போராட்டமானது   தங்கள் கோரிக்கை நிறைவேறும்வiர் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்திய அவர்கள்   மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

காவல்துறையினரின் தடுத்தமையையும் மீற அவர்கள் சென்றதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மேற்கொண்டுள்ளதுடன் அவர்களை கைது செய்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More