Home இலங்கை முசலி – மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் :

முசலி – மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் :

by admin

முசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்,

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்று  ஆட்சிக்கு வந்த நல்லாட்சி சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில்  செயற்படுவது  எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இதன்போது  கிழக்கு மாகாண முதலமைச்சர்; சுட்டிக்காட்டியுள்ளார்,

கொழும்பில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல் கொப்றி மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் வடக்கு கிழக்கில்  தொல்பொருள் மற்றும் வனப்பாதுகாப்பு என மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன என்பதனையும் சுட்டிக்காட்டிய அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பாதுகாப்புக்கும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படாத  காணிகள் எவ்வாறு திடீரென முக்கியத்துவம் பெறமுடியும் எனவும்; கேள்வியெழுப்பியதுடன் அது தொடர்பிலும் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த காணிகள் மற்றும் அவர்களது பூர்விக  விவசாய நிலங்கள் என்பன  கையகப்படுத்தப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை   சம்பூர்  மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் மீள்குடியறே்றத்தை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் எடுத்துரைத்த அவர்  வீடுகள் வழங்க வேண்டிய தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வர வேண்டும் எனவும் போல் கோட்பிரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாகாண சபைகளுக்கு காணியதிகாரம் வழங்கப்படுமிடத்து அதனூடாக காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் குறிப்பிட்ட கிழக்கு  முதலமைச்சர் சுனாமி மற்றும் யுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வரவேண்டுமெனவும்; ஐரோப்பிய  ஒன்றிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More