93
சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love