Home உலகம் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம் – தொழிலாளர் கட்சி

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம் – தொழிலாளர் கட்சி

by admin


பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போதைய  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே பிரதமர் தெரசா மே ஜூன் 8ம்திகதி பொதுத்தேர்தலை நடத்தும்  அறிவிப்பை வெளியிட்டார்.  இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரெக்சிட் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்கொட்லாந்து சுயாதீனமாக ஒரு பாதையை வகுக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமரின் இந்த தேர்தல் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இந்நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு  புதிய பிரெக்சிட் கொள்கையை வகுக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பிரெக்சிட் விஷயங்களைக் கையாளும் நிழல் அமைச்சர்   கீர் ஸ்டார்மர் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

மேலும்  பிரெக்சிட் வெள்ளை அறிக்கையை நீக்கி தாங்கள் ஏற்கனவே பரிந்துரைத்த 6 முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய பிரெக்சிட் கொள்கை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  பிரித்தானியாவில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்த கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் எனவும்  ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More