Home உலகம் காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி

காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி

by admin


காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேட்டோ அமைதி காக்கும் படையினரின் வாகனத் தொடரணி மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகாமையில் இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More