Home இலங்கை முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள விருப்பம் – இலங்கை தமிழரசுக் கட்சி

முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள விருப்பம் – இலங்கை தமிழரசுக் கட்சி

by admin


முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள கட்சி விரும்புவதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயக அரசியலில் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தமிழ் மக்களின் உரிமைகள் முடக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட வேண்டுமெனவும்  மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More