Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை உறவினர்கள் குற்றச்சாட்டு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை உறவினர்கள் குற்றச்சாட்டு

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை எனவும்  அதனால்தான்  தமது  போராட்டம் தீர்வின்றி 75 நாளை எட்டியுள்ளது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

75 நாட்களாக இரவு பகலாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக போராடி வருகின்றோம்  எனவும் ஆனால் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது எங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் மகிந்த வந்துவிடுவார் என்றும், அரசு பதில் தரும் என்றும், சர்வதேசம் உதவி செய்யும் என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வவொரு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் எனவும் தங்களது கண்ணீரில் தங்களின் ஆதாயங்களை தேடிக்கொள்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு என்றாலும் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக கொழும்பில் ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையை செய்ய முடியாத நிலையிலேயே தங்களது பிரதிநிதிகள் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர்கள்  இணக்க அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள் இன்று சரணாகதி அரசியலில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

தங்களிடம் ஒரு பேச்சும், கொழும்பில் ஒரு பேச்சும், வெளிநாடுகளில் ஒரு பேச்சும் என அவர்களது செயற்பாடுகள் தொடர்கிறது எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நிபந்ததையற்ற ஆதரவை அரசுக்கு வழங்குவதனைவிடுத்து மக்களின் பிரச்சினைகளை  தீர்க்கும் வகையில் அரசுக்கு உரிய அழுதத்தை வழங்குமாறு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளிடமும் 75வது  நாளில் கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More