Home இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் இன்று வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்று வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

by admin

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.  வடக்கு மாகாண சபையின் 92ஆவது அமர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருந்த வேளையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில்  அமர்வில் கலந்து கொள்ள சென்ற  வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் எனவும் எனினும்  குறித்த  பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லைஎனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More