Home இலங்கை அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு – மஹிந்த அமரவீர

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு – மஹிந்த அமரவீர

by admin


அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுளு;ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஓராண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் 1994ம் ஆண்டில்  மூன்று மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தில் இரண்டாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More