Home இலங்கை இலங்கை குடிவரவு, குடியகல்வு அலுவலர்கள் சங்கம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை குடிவரவு, குடியகல்வு அலுவலர்கள் சங்கம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

by admin

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்கள் சங்கம் தனது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்குபடுத்தல் சேவை, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு, வெளிநாட்டு தூதரக சேவையில் அதிகாரம்பெற்ற அலுவலர்களை இணைத்தக் கொள்ளுதல், பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை உற்பத்தித்திறனாக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.   இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவையை மேலும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More