Home இலங்கை பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

by admin


குருணாகலில் பள்ளிவாசல் ஒன்றின் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குருணாகல் மல்லவபிட்டிய என்னும் இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

வழிபாட்டு தளமொன்றின் மீதான எவ்வாறான தாக்குதல்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தூதுவர் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் மூன்று தடவைகள் இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More