Home இலங்கை பிரித்தானியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

by admin


பிரித்தானியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மான்செஸ்டரில் நேற்றைய தினம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 59 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் கவலையை அளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More