Home இலங்கை ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது:-

ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது:-

by admin

இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை  மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் யாழில் இயங்கும் சட்டவிரோத கும்பலான ஆவா குழுவின் முக்கிய நபர்கள் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது நபர் இவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அழைத்து சென்ற நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More